“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைத்திரிபால சிறிசேனவை திரும்பிப் போகுமாறு முழக்கங்களை எழுப்பியவாறும், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். “மைத்திரியே திரும்பிப் போ”, “எமக்கு வேண்டாம் அரசியலமைப்பு, இறுதித் தீர்வு தமிழீழமே” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed